தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 அக்டோபர், 2017

தீபாவளியில் இதை செய்தால் அதிர்ஷ்டமாம்! செல்வம் பெருகும்


உலகெங்கும் தீபாவளி பண்டிகை நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக மக்கள் படுஜோராக தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், தீபாவளி அன்று செய்யும் கடமைகளில் ஒன்று தான் எண்ணெய் குளியல்.
இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
  • ஞாயிற்றுக்கிழமை- மனவருத்தம்,
  • திங்கட்கிழமை- உடலுக்கு புத்துணர்ச்சி,
  • செவ்வாய்க்கிழமை- உடல் நலக்குறைவு,
  • புதன்கிழமை- செல்வம்,
  • வியாழக்கிழமை- உடல் நலம்,
  • வெள்ளிக்கிழமை- அதிக செலவு,
  • சனிக்கிழமை- விரும்பியவற்றை பெறலாம்.
இந்த ஆண்டு தீபாவளி புதன்கிழமை வருவதால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
காலை 5 மணிமுதல் 7 மணிவரை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரமாகும், மதியம் 12 மணிக்கு பின்னர் குளித்தால் பலனிருக்காது, இரவு வரையிலும் தூங்காமல் இருக்க வேண்டும்.
இதேபோன்று தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.
  • எண்ணெய்- லட்சுமி
  • சிகைக்காய்- சரஸ்வதி
  • சந்தனம்- பூமாதேவி
  • குங்குமம்- கௌரி
  • தண்ணீர்- கங்கை
  • இனிப்புப் பலகாரம்- அமிர்தம்
  • நெருப்புப் பொறி- ஜீவாத்மா
  • புத்தாடை- மகாவிஷ்ணு
தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது, உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
மேலும் காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டுமாம்.

http://news.lankasri.com/religion/03/134748

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக