தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 மார்ச், 2017

பில்லி சூனியம் என்பது உண்மையா?... நமக்கு வச்சுருக்காங்களா இல்லையா?... எப்படி தெரிந்து கொள்வது?

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை எந்திர தகடுகள் மூலம் உங்களுக்கு செய்து வைக்கப்பட்டிருப்பின் அதை அறிய மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து அதனுடன் சாம்பிராணி கலந்து வீடு முழுவதும் புகை போட்டு வரவும் அவ்வாறு மூன்று நாட்கள் புகை போடவும்.
அப்படி புகைப் போட்டு வரும் நாளில் உங்களுக்கோ உங்களின் குடும்பத்தினருக்கோ உடல்நிலையில் தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்களுக்கு ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை மூலம் பதிப்பு இருப்பது உறுதி. இவ்வாறு புகைப் போட்டு வருவதால் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை வாயிலாக ஏவப்பட்ட துஷ்ட ஆவிகள் இருப்பது உறுதி.
அதேபோல் தின்பண்டங்கள், உணவின் மூலம் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை மருந்து உடலில் கொடுக்கப்பட்டு அதனால் உங்களுக்கு பாதிப்பு இருப்பின் அதை உறுதி படுத்த முருங்கை இலையை சாறு எடுத்து உள்ளங்கையில் விட சாறு உறைந்து கெட்டி பட்டால் உடலில் மருந்து இருக்கிறது என அறியவும். அதுபோல் பாதிப்பு இருப்பின் உடனே அதனை சரிசெய்பவர்களை தொடர்பு கொள்ளவும்.
கண்திருஷ்டியால் பாதிப்படைந்தால் ஐந்து கற்பூரத்தை இரவு நேரத்தில் தலையை வலம், இடமாக மூன்று முறை சுற்றி முச்சந்தியில் ஏற்றி விட்டு திரும்பி பார்க்காமல் வீடு போக முறியும்.
இவைகள் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண் திருஷ்டி நீக்கும் எளிதான முறைகள் தான் என்றாலும் குருவால் தொட்டு காட்டப்படாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது என்பது மூத்தோர் வாக்கு ஆகவே சரியான குருவின் நல் துணை கொண்டு அவரின் தாள் வணங்கி தீட்சை பெற்று செய்தால் மட்டுமே பலன் தரும் என்பதை அறியவும். தானே முயன்று பின் விளைவை அனுபவித்தோர் பலர் எனவே குருவின் துணை நாடுவதே நலமும், வளமும் தரும்.


- See more at: http://www.manithan.com/news/20170312125653#sthash.YYJIkJOO.dpuf


பில்லி சூனிய மாந்திரீகத்தைப் பற்றிய சில மர்ம தகவல்கள்..! 

ஒருவருக்கு கேடு விளைவிக்க செய்யும் ஒரு தீய பயங்கரமான செயலையே பில்லி சூனியம் என்கிறார்கள்.
இந்த பில்லி சூனியம் உலகிலேயே சீனா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பகுதிகளில் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
ஆனால் இது ஒரு மூடநம்பிக்கையாக இருந்தாலும், பலரும் இதை நம்பவே செய்கின்றனர்.
பில்லி சூனியம் பற்றிய சுவாரஸ்ய தகவல்
பில்லி சூனிய மாந்திரீகத்தில் பொம்மைகள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகவும், இந்த பொம்மையைக் கொண்டு எதிரிகளை அழிப்பதாகவும் நம்பப்படுகிறது.
பில்லி சூனிய பொம்மையை வைத்து ஒருவருடைய நகம், தலைமுடி, உடுத்திய துணி அல்லது ரத்தம் ஆகியவற்றைக் கொண்டு மாந்திரீகவாதிகள் சூனியம் செய்வார்கள்.
பில்லி சூனிய சடங்கு ஆரம்பித்த பின், அந்த பொம்மைக்கு உயிருள்ள ஒரு விலங்கின் இதயத்தை எடுத்து அதனுள் வைப்பதால், அந்த பொம்மை உயிர் பெற்று, எதிரியின் ஆத்மாவுடன் இணைக்கப்பட்டு, எதிரியை துன்புறுத்த உதவுகிறதாம்.
பொம்மை எதிரியின் ஆத்மாவுடன் இணைந்த பின், 1/2 இன்ச் நீளமுள்ள ஊசி ஒன்றை பொம்மையின் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் துளையிடுவார்களாம்.
பில்லி சூனியம் மூலம் குறி வைக்கப்பட்ட எதிரி, எவ்வளவு மைல் தொலைவில் இருந்தாலும், அவர்களுக்கு 28 நாட்களுக்குள் அழிவை சந்திக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது.
பில்லி சூனிய பொம்மைகள் ஒருவரை அழிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170310125612?ref=youmaylike3#sthash.esI2DJvq.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக