தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 மார்ச், 2017

1 மாதம் இஞ்சியை உணவில் சேர்த்து சாப்பிடுங்கள்: இந்த அற்புதம் கண்டிப்பாக நடக்கும்!

பண்டையக் காலந்தொற்றே மருத்துவத்தில் பயன்படுத்தும் சிறந்த மூலப்பொருளாக இஞ்சி உள்ளது.
அந்த வகையில் இஞ்சியை 1 மாதம் தொடர்ந்து அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ.
இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • இஞ்சியை தொடர்ந்து 30 நாட்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், செரிமானம் மற்றும் வாயுக் குழாய் கோளாறுகளை சரிசெய்து செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
  • குமட்டல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ அல்லது இஞ்சியை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்விற்கு, தினமும் 1.5 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.
  • அன்றாட உணவில் இஞ்சியை சிறிதளவு சேர்த்துக் கொள்வதால், தசை வலிகளை குறைத்து, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியையும் குறைக்கிறது.
  • மூட்டு பகுதிகளில் அழற்சி, மூட்டு சார்ந்த உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மூட்டு வலி இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க இஞ்சி சிறந்த நிவாரண மூலப்பொருளாக பயன்படுகிறது.
  • இதய நோய் அபாயத்தை குறைப்பதில் இஞ்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் 45 நாட்கள் அன்றாட உணவு முறையில் 3 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் குறைத்துவிடும்.
  • இஞ்சியில் உள்ள 6- Gingerol எனும் மூலப்பொருள் புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதாகும். எனவே தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை உணவில் சேர்த்தால், அது புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுக்கிறது.
  • இஞ்சியில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்டுகள் மூளையின் செயற்திறனை ஊக்குவித்து, மூளையின் ஆரோக்கியத்தை பலவகையில் மேம்படுத்த உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக