தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

உடல் எடையைக் குறைக்க 8 ஆயுர்வேத முறைகள்...!

சூர்ய முத்ரா
சூர்ய முத்ரா
சப்பணம் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையை 15-20 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
யோகாசனம்
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, இரண்டு வகை ஆசனங்கள் உதவுகின்றன. அவை..
திரிகோணாசனம்
திரிகோணாசனம்
இரண்டு கால்களையும் அகட்டிவைக்கவும்.
கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருபக்கமும் நீட்டிக்கொள்ளவும்.
வலது கையால் வலது பாதத்தை உடலை வளைத்துத் தொடவேண்டும். அப்போது, இடது கையை செங்குத்தாக மேல் நோக்கித் தூக்க வேண்டும். இதே நிலையில் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
பின்னர், இதேபோல இடது கையால் இடது பாதத்தைத் தொட வேண்டும். அப்போது, வலது கையை செங்குத்தாக மேல் நோக்கித் தூக்க வேண்டும். இதே நிலையில் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
தினமும் காலையில் இந்த ஆசனத்தைச் செய்து வந்தால், இடுப்புப் பகுதியில் உள்ள ஊளைச்சதை குறையும்.
புஜங்காசனம்
புஜங்காசனம்
குப்புறப் படுத்துக்கொண்டு இரு கால்களையும் அகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
இரு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றி, கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இடுப்புப் பகுதி வரை மேல் நோக்கி முடிந்த வரை உடலை வளைக்க வேண்டும். இதே நிலையில் குறைந்தது 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
இந்த ஆசனத்தைச் செய்யும்போது அடிவயிற்றுத் தசைகள் மேல் நோக்கி இழுக்கப்படுகின்றன. இந்த ஆசனத்தை தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்துவந்தால், அடிவயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.
நவஹ குக்குலு மாத்திரை
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆயுர்வேத மருத்துவத்தால் பரிந்துரைக்கப்படுவது 'நவஹ குக்குலு' மாத்திரை.
திரிபலா, சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய், கடுக்காய், தாந்திரிக்காய், வாய்விடங்கம், கோரைக் கிழங்கு, கொடிவேலி ஆகியவற்றுடன் குக்குலு மரத்தின் பிசினைக் கலந்து தயாரிக்கப்படுவது, நவஹ குக்குலு மாத்திரை. இதனை தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிடலாம். சர்க்கரைநோய், இதய நோய்களுக்கு அலோபதி மருந்து சாப்பிடுபவர்களும் இதனைச் சாப்பிடலாம். இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது.
எனிமா சிகிச்சை
ஆயுர்வேத மருத்துவ முறையில் பலவகை எனிமாக்கள் உள்ளன. யார் யாருக்கு எந்தெந்த வகை எனிமா கொடுக்க வேண்டும் என மருத்துவர் முடிவுசெய்வார். மருத்துவரின் பரிந்துரையின்படிதான் குறிப்பிட்ட இடைவெளியில் எனிமா எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், மலக்குடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் சுத்தமாக வெளியேற்றப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக