தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஜனவரி, 2017

இறந்தவர்களின் கால் கட்டை விரல்கள் கட்டப்படுவது ஏன் என்று தெரியுமா?

மனிதர்கள் இறந்த பின்னர் பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
அதில், ஒன்றுதான் இறந்தவர்களின் கால் கட்டை விரல்களை ஒன்று சேர்த்து கட்டி வைப்பது.
மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழு வதும் அகன்றுவிடுவதில்லை. என வே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதனால் தான் இறந்தவர்களின் கால் விரல்கள் கட்டப்படுகின்றன.
மேலும், மரணம் நிகழ்கிற போது கால்கள் அகலமாகத் திறந்து கொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக் கும் அந்தச் சூழலுக்கும் நல்ல தல்ல.
எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும்.
இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
மூலாதாரம் திறந்திருக்கிற போது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும்.
அதனால் தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக