தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 செப்டம்பர், 2014

சின்ன வயசுல நான் *****************

1.புஸ் ஆன பட்டாச எடுத்து பேப்பர்லாம் கிழிச்சு அந்த தூள எடுத்து பத்த வச்சு புஸ்ன்னு எரியும் அத பாத்து சந்தோசப்பட்டது
2.வீடுகட்ட கொட்டுன மணல்ல.. பல வீடு கட்டிருக்கேன்
3.மயில் இறகு குட்டி போடும்-னு ஷார்ப்நற் துல தீனியா போட்டு புக்-ல வளர்ப்போம்
4.யாராவது காலை தாண்டி போனா வளர மாட்டேன்னு நினைச்சேன்
5.உங்க வீட்டுக்கு பாம்பு வரும் சிலேட்டு குச்சி போடுன்னு பொம்பள புள்ளைகள பயமுறுத்தினேன்
6.எழுத்தாளர் சுஜாதான்னா ஒரு பொண்ணுன்னு நெனச்சேன்
7.சிலேட்டு குச்சி சாப்பிட்டுருக்கேன்
8.நீராருங் கடலொடுத்த பாடும் போது கண்ண மூடினே இருப்பேன் தொறந்தா மிஸ் அடிப்பாங்கனு பயம்.
9.பலமுறை வானத்தையே பார்த்துட்டு இருந்தேன் ‘சக்திமான்’ வருவார்னு!
10. பரீட்சை காலையில் மட்டும் திடீர் பக்தி பிரவாகம்
11.exam கு சரியா படிக்கலன்னா இன்னிக்கு CM அல்லது PM போய் சேர்ந்துடனும்னு வேண்டிக்குவேன்!
12.சச்சின் அவுட் ஆனா அழுவேன் ..
13.தேர்வுக்கு முந்தைய நாள் இரவு சாமி படத்துக்கு முன்னாடி பென்சிலை வைத்து பவர் ஏற்றி எடுத்துச் சென்றிருக்கிறேன்
14.இந்தியா வும் ,பாகிஸ்தான் ஒன்னு சேர்ந்துடணும் , அப்றோம் பாரு டா இந்த ஆஸ்திரேலியாவ எப்புடி அடிப்போம் னு யோசிச்சன்.
15. Aeroplane அ கொஞ்சம் கீழ பறக்க வெச்சா நாம வீடு மொட்ட மாடிலையே எறங்க வேண்டிய வங்கலாம் எறங்கிடலாம்ன்னு நெனச்சேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக