தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 செப்டம்பர், 2014

பளபளப்பான முகம் வேண்டுமா? இதை செய்யுங்க!

இன்றைய காலத்தில் பெண்கள் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள கெமிக்கல்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
முகத்தை அழகாக வைத்துக் கொள்ள எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், வீட்டில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இணை எதுவும் இருக்காது.
ஏனென்றால் சருமத்தை அழகாக்க பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் அதிக அளவில் கெமிக்கல்கள் கலந்திருக்கும்.
இதனால் அந்த கெமிக்கல்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதுமட்டுமின்றி, அதிக அளவில் சருமத்திற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி வரும் போது, திடீரென்று அதன் உபயோகத்தை நிறுத்தினால், தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும்.
ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.
இதனால் சரும துளைகள் விரிவடைந்து, அதனுள் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும்.
மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வெளிவந்து, சருமம் சுத்தமாக இருக்கும்.
கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும்.
மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது.
அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக